கணவன் மனைவி சுட்டுக் கொலை .

by Staff / 28-03-2023 05:09:28pm
கணவன் மனைவி சுட்டுக் கொலை .

பிலிப்பைன்ஸில் பஞ்சாபி தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன் பிலிப்பைன்ஸில் குடியேறினர். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளாக ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், இரவு நேரத்தில் வந்த கணவரின் நண்பர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து தம்பதியை சுட்டுக் கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via