சாராயம் விற்பனை செய்த 11 நபர்கள் கைது

by Editor / 06-03-2022 11:45:33am
 சாராயம் விற்பனை செய்த 11 நபர்கள்  கைது

திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கள்ளச்சந்தையில் சாராயம் விற்ற 11 நபர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பருத்தியூர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன், குடவாசல் பகுதியை சேர்ந்த மோகன், மணப்பறவை பகுதியைச் சேர்ந்த பன்னீர் உள்ளிட்ட  11 நபர்கள் வெளிமாநில சாராயத்தை விற்பனை செய்து வந்ததையடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 500 லிட்டர் வெளிமாநில சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

Tags : 11 persons arrested for selling liquor

Share via