நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி சரிந்து விழுந்து விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

by Admin / 09-03-2022 03:30:19pm
நிலக்கரி சுரங்கத்தின் மேற்பகுதி சரிந்து விழுந்து விபத்து 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


தெலுங்கானாவின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெத்தபள்ளி மாவட்டம் ராமகுண்டம் பகுதியில் உள்ள சிங்க ரேணி நிலக்கரி சுரங்கத்தில் ஊழியர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டிருந்தபோது.

சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட நிலையில்.அவர்களில் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்தில் சுரங்க பாதுகாப்பு மேலாளர் ஜெயராஜ் உதவி மேலாளர் சைதன்யா ஒப்பந்த தொழிலாளி ஸ்ரீகாந்த் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது


 

 

Tags :

Share via