விபத்தில் சிக்கிய வாகனம் தீப்பற்றி எரிந்து ஓட்டுனர் பலி

by Editor / 12-03-2022 08:24:11am
விபத்தில் சிக்கிய வாகனம் தீப்பற்றி எரிந்து  ஓட்டுனர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து அசோக் லேலண்ட் தோஸ்த் என்கிற நான்கு சக்கர பதிவு செய்யப்படாத வாகனத்தை கடலூர் மாவட்டத்தில் டெலிவரி செய்வதற்காக நேற்று இரவு ஐந்து வண்டிகள் வந்துள்ளன. இதில் ஒரு வாகனத்தை திருப்பத்தூர் அருகிலுள்ள வெலக்கல்நத்தம் கிராமத்தை சேர்ந்த பாசில் என்பவர் திருப்பத்தூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி செல்லும்போது மகனூரபட்டி என்ற இடத்தில் நள்ளிரவு நேரத்தில்   திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின்  மீது வேகமாக இவரது வாகனம் மோதியதில் புதிய அசோக் லேலண்ட் தோஸ்த்  வாகனம் முற்றிலும் சேதமடைந்து  சம்பவ இடத்திலேயே ஓட்டுநர் பாசில் பலியானார். விபத்து நடந்தவுடன் அவரை மீட்பதற்குள் அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனம் திடீரென முற்றிலும் தீப்பற்றி எரிந்தது விரைந்துவந்த ஊத்தங்கரை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி வாகனத்தினுள் சிக்கிய பாசிலை மீட்க முடியாமல் கருகிய நிலையில் பாசிலின் உடல் மீட்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags : The vehicle caught fire and the driver was killed

Share via