கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட 3 பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க அனுமதி

by Editor / 16-03-2022 06:59:08pm
கொரோனா  தொற்று காரணமாக நிறுத்தப்பட்ட 3 பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க அனுமதி

கொரோனா தொற்று காரணமாக அனைத்து பயணிகள் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டன. தற்போது படிப்படியாக பயணிகள் ரயில் சேவை துவக்கப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் மேலும் 111 பயணிகள் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதில் தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில் திருச்சி - மானாமதுரை - திருச்சி (76807/76808), திருநெல்வேலி - நாகர்கோவில் - திருநெல்வேலி (56718/56717), செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை (56735/56732) ரயில்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக மதுரை - ஆண்டிபட்டி - மதுரை ரயில் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

Tags : Permission to re-run 3 passenger train which was stopped due to corona infection

Share via