மது போதையில் சாலையின் குறுக்கே படுத்து இருந்த நபர் மீது ஏறி இறங்கிய கார் விபத்து

by Admin / 17-03-2022 04:32:41pm
மது போதையில் சாலையின் குறுக்கே படுத்து இருந்த நபர் மீது ஏறி இறங்கிய கார் விபத்து


கேரள மாநிலம் கொல்லம் அருகே மது போதை தலைக்கு ஏறி சாலையின் குறுக்கே படுத்து இருந்த நபர் மீது அடுத்தடுத்து இரண்டு கார்கல் ஏறி இறங்கிய பதபதைக்க சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பரணிகாகவும் பகுதியைச் சேர்ந்த நிசாம் என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் மதுபான கடையில் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் கடையில் வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு இடையூறாக அவர் நின்றிருந்ததால் மது கடை ஊழியர்கள் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளனர்.

மதுபோதை தலைக்கேறி என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நிசாம் சாலையின் குறுக்கே சென்று படுத்து உள்ளார்.

சிறிது நேரத்தில் அவ்வழியாக வேகமாக வந்த கார் ஒன்று நிசாம்  மீது ஏறி இறங்கியது பின்னால் வந்த பிற வாகனங்களும் ஏறிய நிலையில் நிசாம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்

 

Tags :

Share via