பாலியல் தொழில் நடத்தி வந்த பெண் 4 ஆண்களையும் கைது செய்த போலீசார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பாலியல் தொழில் செய்து வந்த பெண் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஜோலார்பேட்டை அடுத்த பால்நாங்குப்பம் பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்ட போலீசார், பாலியல் தொழில் நடத்தி வந்த தம்பதியினர் உட்பட வாடிக்கையாளராக வந்த 4 ஆண்களையும் கைது செய்தனர்.
விசாரணையில் குடும்ப வறுமையில் தவிக்கும் பெண்களை குறிவைத்து தம்பதியினர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 2 பெண்களை காவல்துறையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Tags :