பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

by Editor / 20-03-2022 09:42:38pm
பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

தென்காசி வட்டாரம், 13 வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்.கோபால சுந்தர ராஜ்,  அவர்கள் பார்வையிட்டு பள்ளி மேலாண்மைக்குழுவின் முக்கியத்துவம், பெற்றோர்களின் கடமை, மற்றும் பள்ளி மேலண்மைக்குழு மறுகட்டமைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனைகளை வழங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும் எனவும், இக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தேவைகளை அறிந்து திட்டமிட்டு சமுதாயத்தின் பங்களிப்போடு அவற்றை நிறைவேற்றி குழந்தைகளுக்கு தரமான கல்வி அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர்  தென்காசி நகர்மன்ற தலைவர் .சாதிர் தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.சங்கீதா சின்னராணி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் .சீவலமுத்து, வட்டாரக்கல்வி அலுவலர்கள், மற்றும் தலைமையாசிரியர், பெற்றோர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
 

Tags :

Share via