காதலன் கண்முன்னே பாழடைந்த கட்டிடத்தில் பாலியல் வன்கொடுமை

by Staff / 29-03-2022 12:57:43pm
 காதலன் கண்முன்னே பாழடைந்த கட்டிடத்தில் பாலியல் வன்கொடுமை

கடலூரில் காதலுடன் பாழடைந்த  கட்டிடத்திற்குள் தனிமையில் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை மூன்று பேர் சேர்ந்து மிரட்டி வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் கண்முன்னே இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரச் சம்பவம் கடலூர்  மாவட்டம் செம்மண்டலம் பேருந்து நிறுத்தத்தில் நள்ளிரவில் 21 வயதுடைய பெண் ஒருவர் தனியாக நின்று அழுது கொண்டிருந்தார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் சந்தேகம் அடைந்து அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட தகவல் தெரியவந்தது.

நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண் ஸ்டேஷனரி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார் இருவரும் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கம்மியம்பேட்டை ஒதுக்குப்புறமாக சாலையோரமாக இருந்த பாழடைந்த கட்டிடத்திற்குள் இருவரும் தனிமையில் பேசிக்கொண்டு அந்த நேரம் பார்த்து அந்த கட்டிடத்திற்குள் புகுந்து 3 பேர் கொண்ட கும்பல் காதலர்களும் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்களை செல்போனில் படம் பிடித்து மிரட்டிய அந்த கும்பல் காதலன் கண்முன்னே இளம்பெண்ணை வலுகட்டாயமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளார்  சினிமாபாட  பாணில  இரண்டு பேர் சேர்ந்து பிடித்து வைத்துக் கொண்ட நிலையில் மாறிமாறி இளம்பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தது தெரியவந்துள்ளது.

இருவரது செல்போனையும் பிடுங்கிக் கொண்ட அந்த பாலியல் கும்பல் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் இருவரும் சேர்ந்துஇருந்த  மாதிரி எடுத்த புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிடுவோம் என கூறி மிரட்டி அனுப்பி வைத்தாக சொல்லப்படுகிறது. 

இதனை அடுத்து இளம்பெண்ணை அழைத்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தா போலீசார்.அவர் சொன்ன அங்க அடையாளங்களை வைத்து அந்த பகுதில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த பகுதியில் சந்தேக படும் படியாக சுற்றி திரிந்த ஆரிஃப் சதீஸ் கிஸோர் மூன்று பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.   இந்த மூன்று பெரும் தன அந்த பெண்ணை  பாலியல் வன்கொடுமை செத்தனர் என்று உறுதியானது.

இதனை தொடர்ந்துபோலீசார் காதலனையும் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர் காதலர்கள் தனிமையில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு. விரட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனிமையில் பேசுவதற்காக இரவு நேரங்களில் இது போன்று பாழடைந்த கட்டிடத்தில் ஒதுங்கினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக நடந்திருக்கிறது இந்த  சம்பவம் மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்க இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

 

Tags :

Share via