ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

by Staff / 30-03-2022 12:27:50pm
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் ஸ்ரீநகரில் ரெய்னாவாரி  பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்து  இருந்த   திரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில் பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் எதிர் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில்  லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவன் முன்னாள் பத்திரிகையாளர் என்பது தெரியவந்துள்ளது .

கடந்த ஆகஸ்ட் மாதம் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பில் சேர்ந்த அவன் பல்வேறு பயங்கரவாத குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

 

Tags :

Share via