காவிரி ஆற்று வெள்ளம் 40 வீடுகளை சூழ்ந்தது.
மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளான நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் உள்ள காவிரி கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு பவானி நகராட்சிக்கு உட்பட்ட கந்தன்பட்டறை பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த 120க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
Tags : 40 houses were engulfed by Cauvery river flood.