நன்றாகப் படித்தால் அச்சமின்றி தேர்வு எழுதலாம் பிரதமர் மோடி
நேரடி வகுப்பில் கற்பதை இணையவழியில் உள்ளதால் கற்றலுக்கான வழிமுறை ஒரு தடை இல்லை என்றும் கருத்தூன்றிப் படித்தால் அச்சமின்றி தேர்வு எழுதலாம் என்று பிரதமர் மோடி.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் தேர்வு பற்றிய விவாதம் எனும் நிகழ்ச்சி தால்கதோரம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பிரதமர் மோடி பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார் அப்போது பேசிய அவர் தேர்வுகள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான படிக்கட்டுகள் அறிவித்தார்.
அஞ்சாமல் பிறரை பார்க்காமல் தான் படித்ததை கொண்டு நம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் என தெரிவித்தார்.
இணையவழி படிக்கும் மாணவர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை போகாமல் படிப்பில் அக்கறை காட்ட வேண்டுமென பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
ஆசிரியர் பெற்றோர்நெருக்குதல் இல்லாத மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறமுடியும் என குறிப்பிட்டார்.
பெற்றோர் தம் கனவுகளை பிள்ளைகளின் மீது திணிக்கக் கூடாது என்றும் எதிர்காலம் பற்றிய தீர்மானத்தை அவர்களிடமே விட்டு விட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பிள்ளைகளின் திறமைகளை பெற்றோரும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ள தவற விடக்கூடாது என குறிப்பிட்டார் .
மாற்றுத்திறனாளிகள் பல திறன் உள்ளதாகவும் அவர்கள் பலவீனங்களை பலமாக மாற்றிக் கொள்வ தாகவும் குறிப்பிட்டார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஆட்டோகிராப் வழங்கி பிரதமர் வாழ்த்தினார்.
Tags :