சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

by Editor / 02-04-2022 08:58:32pm
சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையில் உள்ள புலியூர் கிராமத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்டோர் சேம்பரை கிராமத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஆஞ்சநேயர் கோயில் திருவிழாவில் பங்கேற்பதற்காக மினி வேனில் புறப்பட்டுச் சென்றனர். வழியில்,  ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் பின்னோக்கி வந்து  பள்ளத்தில் கவிழ்ந்தது.இந்த விபத்தில் 3 பள்ளி மாணவிகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்தும், விபத்தில் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

சரக்கு வாகனம் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி-முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.
 

Tags : 11 killed in truck overturn - CM announces relief

Share via