செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது

by Editor / 08-04-2022 10:11:39pm
 செவிலியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த  மருத்துவர் கைது

தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர் தூத்துக்குடிபகுதியில் செயல்பட்டுவரும் தனியார் சிறுநீரக சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 7ஆம் தேதி 

 புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் மனு அளித்தார். அந்த மனுவில், தான் பணியாற்றி வரும் மருத்துவமனையின் நிறுவனரான சிறுநீரக நோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் சுப்பிரமணியன் வியாழக்கிழமை அவரது வீட்டுக்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அந்தப்புகாரில் தெரிவித்துள்ளார்.

 இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மருத்துவர் சுப்பிரமணியனிடம் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சுப்பிரமணியன் கூறியதால் அவரை கைது செய்த போலீஸார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 

 

Tags :

Share via