மதுரையில் கள்ளழகர் வைகையில் எழுந்தருளுவதற்காக தங்க குதிரை வாகனம் புறப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா மதுரை மாவட்டத்தில் தற்போது வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.
இதற்காக அழகர் கோவில் ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவிலில் இருந்து தங்க குதிரை வாகனம் சேஷ வாகனம் மற்றும் கருட வாகனம் மதுரைக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி கள்ளழகர் திருக்கோவிலில் நடைபெற்றது.
முன்னதாக இந்த தங்க குதிரை வாகனம் சேஷ வாகனம் மற்றும் கருட வாகனங்களுக்கு திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஸ்ரீ பாதத்தினர் ( ஸ்ரீ கள்ளழகரை அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்று திரும்பும் வரை சுமப்பவர்கள்) மதுரைக்கு வாகனம் மூலம் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
Tags :