ரஷியாவிடமிருந்து எண்ணை கொள்முதல் நிறுத்தவேண்டும்

by Staff / 12-04-2022 12:41:56pm
ரஷியாவிடமிருந்து  எண்ணை  கொள்முதல் நிறுத்தவேண்டும்

ரஷியாவிடமிருந்து இந்தியா எரிபொருள் வாங்குவது குறித்த கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை மந்திரி அதிரடியாக பதிலளித்துள்ளார்.

இந்தியா-அமெரிக்கா இடையே '2 பிளஸ் 2' பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனை தொடர்ந்து இரு நாட்டு வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை மந்திரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியா - அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், ராஜாங்க ரீதியிலான உறவை மேம்படுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

 

Tags :

Share via