பணிநீக்கம் செய்யப்பட்ட காவலர் சாவில் மர்மம் உறவினர்கள் குற்றச்சாட்டு.
மேலூரில், உடலில் காயங்களுடன் இறந்து கிடந்த முன்னாள் காவலர். உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு...
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நொண்டிக்கோவில்பட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (36). இவர் 2011 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்ட காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வந்த நிலையில், கடந்து 3 ஆண்டுகளுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கூலி வேலை செய்து வந்த நிலையில், மேலூர் செக்கடி பகுதியில் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக மேலூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேலூர் காவல்துறையினர், இறந்த லெட்சுமணன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், லெட்சுமணன் உடலில் இரத்த காயங்கள் இருப்பதால், சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியதுடன் இதுகுறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Tags : பணிநீக்கம் செய்யப்பட காவலர் சாவில் மர்மம் உறவினர்கள் குற்றச்சாட்டு.