தகவல் உரிமைச் சட்டத்தில் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுரை.

by Editor / 29-09-2023 10:52:27pm
தகவல் உரிமைச் சட்டத்தில் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுரை.

தகவல் உரிமைச் சட்டத்தில் மனு அளிக்கும் பொது மக்களுக்கும் பதிலளிக்கும் அதிகாரிகளுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுரை.

தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் உரிமை ஆணையாளர் திருமலை முத்து தலைமையில் பொதுமக்கள் அளித்த புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று 27 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது விசாரணைகள் நடைபெற்றன இதன் தொடர்ச்சியாக மாநில தகவல் ஆணையர்  திருமலைமுத்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் தெரிவிக்கும்போது பொது தகவல் ஆணையத்தின் மனு அளிப்பவர்களுக்கும் மனுவுக்கு பதில் சொல்வர்களுக்கும் புரிதல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் முகாம்கள் நடத்தவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

Tags : தகவல் உரிமைச் சட்டத்தில்

Share via