காரைக்குடி - சென்னை பல்லவன் மற்றும் சென்னை - மதுரை வைகை ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும்

by Editor / 12-04-2022 09:49:36pm
காரைக்குடி - சென்னை பல்லவன் மற்றும் சென்னை - மதுரை வைகை ரயில்கள் நாளை வழக்கம் போல் இயங்கும்

சென்னை - விழுப்புரம் ரயில்வே பிரிவு ரயில் பாதை பராமரிப்பு பணிகளுக்காக ஏப்ரல் 13 அன்று காரைக்குடியிலிருந்து அதிகாலை 05.30 மணிக்கு புறப்படும் காரைக்குடி - சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் சென்னையிலிருந்து மதியம் 01.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவை செங்கல்பட்டு சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  இந்த ரயில்கள் தற்போது தமிழ் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் இயங்கும்.

 

Tags :

Share via