வசூலில் சக்கை போடு போடும் கே.ஜி.எப்.-2 .யாஷ் இந்திய சூப்பர் ஸ்டார்.

by Writer / 15-04-2022 11:27:34pm
வசூலில் சக்கை போடு போடும் கே.ஜி.எப்.-2  .யாஷ் இந்திய சூப்பர் ஸ்டார்.

 


ஏப்ரல் 13 ம் தேதி பீஸ்ட் வெளியாகவுள்ளநிலையில் ,மறு நாள் கே.ஜி.எப்.2 வருகிறதே .அதற்குப்போட்டியா? என்று நடிகர் யஷிடம் கேட்டதற்கு  அவர் தன்னடக்கத்துடன் ,விஜய் சீனியர் நடிகர்.அவரை என்குப்பிடிக்கும். அவர் படத்தோடு போட்டியிடவில்லை .பீஸ்டினால் கே.ஜி.எப்.வசூலில் பாதிப்படையாதா என்ற கேள்விக்கு கூட அவர் நிதானமாக ,பீஸ்ட்வேறு களம். கே.ஜி.எப்.வேறு களம் என்று கூறியிருந்தார்,இது அவரின் தன்னடக்கம். மற்றபடி, அவருக்கு கே.ஜி.எப் எந்த மாதியாக எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரியும்.கே.ஜி.எப். முதல் பாகம் வெற்றி பெற்று இந்திய திரை உலகை திரும்பி பார்க்க வைத்தது. அதன் பாகம் 2 பார்க்க ஆவல் அதிகரித்ததிருந்தது. பீஸ்ட்  தமிழகத்தில் மட்டும் தான் வசூலில் சாதிக்கும்.கூடிப்போனால்,ஆந்திரா-கேரளாவில் வசூலிக்கும்.மும்பையில் ஒரு சில கோடிகளை மட்டுமே வசூலிக்கும் என்கிற கருத்து நிலவியது.அதை உறுதிப் படுத்தும் விதமாக பீஸ்ட்படம்ி முதல் நாளில் ரஜினியின் வசூல்  சாதனனயை முறியடித்தது பீஸ்ட் கே.ஜி.எப் 14ஆம் தேதி காட்சிப்படுத்தபட்டபொழுதே படம் உச்சம் என்ற கருத்து உலாவ ஆரம்பித்தது. காலை 4.00 மணிக்கு அடுத்த காட்சி..அடுத்தடுத்த காட்சியெள படத்தினை பார்த்த ரசிகர்களின் விமர்சனங்கஸால் படத்தின் மதிப்பீடு வேகமாகக்காட்டுத்தீயாகப் பரவி  திரையரங்கு வசூலை அள்ள ஆரம்பித்தது.பீஸ்ட் வெளியான திரையரங்குகளில் கே.ஜி.எப். பேனர்கள் இருட்டிப்பு செய்யப்பட்டிருந்தது. ஆனாலும் கதை,இயக்கம்,நடிப்பு ,இசை என அனைத்திலும் பீஸ்டை பின்னுக்குத்தள்ளி வசூலை வாரி அள்ளியது.14 ம் தேதி ஒரே நாளில் பீஸ்டின் இரண்டு நாள் வசூவல எடுத்து ..பாகுபலி சாதனையையும் முறியடித்தது.இந்தியாவெங்கும் ஒருநாள் வசூல் 134 கோடி. மும்பையில் மட்டும் 61 கோடி வசூலித்துள்ளது. யாஷ்-சஞ்சய தத் இருவரது நடிப்பு,வசனம், ரசிகர்களை கவர்ந்தது.பிரதமராகநடித்த ரவீனா டான்டன்,அடுத்த கே.ஜி.எப்.எப்பொழுது வரும் என்று எதிர்பார்ப்பை
உருவாகியகதையாசிரியர்..இயக்குநர் பிரசாத் நீல்..பேசி..பேசி..கயைில் கோட்டை விட்ட பீஸ்ட் படக்குழு...பேசாமல் சாதித்த கே.ஜி.எப் -2  ..பான் இந்தியா.யாஷ் இந்திய சூப்பர் ஸ்டார்.

 

Tags :

Share via