பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

by Staff / 18-04-2022 11:37:29am
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் பீதி ஏற்பட்டது மக்கள் நடமாட்டமில்லாத இரவு நேரம் என்பதால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை பேருந்து நிலையம் தற்போது புதுப்பிக்கப்பட்டு இந்த நிலையில் நேற்று இரவு திடீரென அதிக சத்தத்துடன் குண்டு வெடித்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கீழ்த்தளத்தில் படி ஏறும் இடத்தில் உள்ள சுவரில் குண்டு வெடித்து சிதறி  அதற்கான தடயங்கள் காணப்பட்டு இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை செய்யும் ஒரு நபர் நாட்டு வெடிகுண்டு வீசியதாகவும் அந்த குண்டு வெடித்து சிதறிய தாகவும் கூறப்படுகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via