போலீஸ் என கூறி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

by Staff / 18-04-2022 11:33:47am
போலீஸ் என கூறி  தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவர் கைது

ஸ்ரீபெரும்புதூரில்  போலீஸ் என கூறி  தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர் வைப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த ரகுமான் என்பவரிடம் போலீஸ் யூனிபார்மில் டூவீலரில் வந்த இருவர் பணம் கேட்டு மிரட்டியதாக பயந்துபோன ரகுமான் தனது வங்கி கணக்கில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் ஆன்லைனில் அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து ரகுமான் தனது நண்பர்களுக்கு தெரிவித்த நிலையில் செல்போன் எண் மூலம் தொடர்பு கொண்டு அவர்கள் இருவரையும் வரவழைத்துள்ளனர் தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து போலி போலீஸ் என தெரியவந்தது தகவலின்பேரில் வந்த போலீசார் தாங்கள் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து இரு சக்கர வாகனம் செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via