இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர் குடும்பத்தினர்

by Staff / 17-09-2022 12:26:47pm
இளம்பெண்ணை அடித்துக் கொன்ற கணவர் குடும்பத்தினர்

ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர். ஹுசைனாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தருவா கிராமத்தைச் சேர்ந்த ரோமி தேவி (22) கொல்லப்பட்டார்.

இவர்களது திருமணம் கடந்த மே 14ம் தேதி நடந்தது. சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ரோமியின் கணவர் சஞ்சித், தந்தை சங்கர் சிங், தாய் பர்பியா தேவி, உறவினர்கள் மணீஷ் சிங் மற்றும் பூஜா தேவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

ரோமிக்கு வரதட்சணையாக ரூ.8 லட்சம் வழங்கப்பட்டது. ஆனால், ரோமி தனது கணவர் குடும்பத்தினரால் அதிக பணம் கேட்டு தொடர்ந்து துன்புறுத்தியதாக இறந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via