ராணுவ அதிகாரிகள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.

by Staff / 18-04-2022 12:57:52pm
ராணுவ அதிகாரிகள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.

டெல்லியில் தொடங்கும் உயர் ராணுவ அதிகாரிகளின் மாநாட்டுக்கு ராணுவ தளபதி       எம். எம். நரவானே தலைமை தாங்குகிறார். அவர் இம்மாதம் ஓய்வு பெறுவதால் அவர் பங்கேற்கும் கடைசி மாநாடு இதுவே ஆகும்.

மாநாட்டில் சீனாவுடனான 3 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் நீள எல்லை கோட்டு பகுதியில், இந்திய ராணுவத்தின் தயார் நிலை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.

காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், ஆகியவை பற்றியும் விவாதிக்கப்படும், மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் குறித்தும் ஆலோசிக்கப்படும், என்று தகவல் வெளியாகியுள்ளது.

சீனா பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் எல்லைகளில், இந்திய பாதுகாப்புக்கான சவால்கள் பற்றியும் விரிவாக ஆய்வு செய்யப்படும்.

 

Tags :

Share via