கிருஷ்ணகிரியில் நெல் அரைக்கும் இயந்திரத்தின் பெண்ணின் தலைமுடி சிக்கியதால் விபரீதம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நெல் அரைக்கும் இயந்திரத்தில் பெண்ணின் தலைமுடி சிக்கியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூங்கில் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் நேற்று இரவு நெல் அரைக்கும் இயந்திரத்தின் நெல்லை அரைத்துக் கொண்டு வருவதற்காக சென்றுள்ளார். அப்போது அந்த இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமி தலைமுடி சிக்கிக்கொண்டது இதனையடுத்து இயந்திரத்தின் வேகத்துக்கும் எடுத்துச் செல்லப்பட்ட அவர் அதன் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தார் உடனே மீட்டு மருத்துவமனையில்அனுமதித்தனர்.
Tags :