19 லட்சம் குடும்ப அட்டைகளை சரிபார்க்க தெலுங்கானா மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தெலுங்கனாவில் ரத்து செய்யப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளையும் மீண்டும் சரிபார்க்கும் பாடி அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து 19 லட்சம் போலி குடும்ப அட்டைகளை ரத்து செய்துள்ளதாக தெலுங்கானா அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது இதனை விசாரித்த நீதிபதிகள் முறையான விசாரணையின்றி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டது ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டனர். ரத்து செய்யப்பட்ட அனைத்து குடும்ப அட்டைகளையும் மீண்டும் சரி பார்க்கும்படி தெரிவித்தனர்.
Tags :