தொலைத்தொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை வழக்கு திருப்புமுனை

by Staff / 28-04-2022 02:48:14pm
தொலைத்தொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை வழக்கு திருப்புமுனை

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தனியார் தொலைதொடர்பு நிறுவன பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஏற்பட்ட ஒன்றே முக்கால் கோடி ரூபாய் கடனை காரணம் என போலீசார் துப்பு துலக்கி உள்ளன.கடந்த டிசம்பர் மாதம் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சந்தேக மரணம் என உறவினர்கள் அளித்த புகாரின்  அடிப்படையில் தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான பிஜிஷா  35 சவரன் நகையை பணயமாக வைத்து விளையாடி உள்ளனர் .தொடர் தோல்விகளால் ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை கடனாளியாக மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via