17வது ரோஜா கண்காட்சி துவங்கியது

by Editor / 14-05-2022 05:24:54pm
17வது ரோஜா கண்காட்சி துவங்கியது

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான கோடை விழா கடந்த வாரம் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடங்கியது. 3 நாட்கள் நடக்கும் இந்த கண்காட்சியில் பல வாசனை திரவிய பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

ஊட்டியில் உள்ள ரோஜா பூங்காவில் இன்று 17வது ரோஜா கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை கலெக்டர் அம்ரித், அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்ர்வையிட்டனர்.

17வது ரோஜா கண்காட்சி துவங்கியது
 

Tags :

Share via