பாகிஸ்தானிலிருந்து போதை பொருள் கடத்தல்.. விடுதலை புலிகள் ஆதரவாளர் சென்னையில் கைது

by Editor / 07-10-2021 09:52:33am
பாகிஸ்தானிலிருந்து போதை பொருள் கடத்தல்.. விடுதலை புலிகள் ஆதரவாளர் சென்னையில் கைது

விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளர் ஒருவர் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாா்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது.

இதுதொடா்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் இலங்கையைச் சோந்த 6 போ மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையைச் சோந்த சற்குணம் (என்ற) சபேசன் (47) என்பவர் குறித்து தெரியவந்தது. இவா் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சோந்தவா். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும் போதைப் பொருள்களையும் கடத்தி, அதன்மூலம் கிடைத்த தொகையை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிா்ப்பிக்கும் முயற்சிக்காக இவர் வழங்கியுள்ளாா் என்று என்.ஐ.ஏ கூறுகிறது.

இந்த தொகையை இலங்கையில் உள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் வீரா்களுக்கு அனுப்பி வைப்பதில் அவா் பங்காற்றினாராம். இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவு எண்ணம் கொண்டவா்களின் சந்திப்பு கூட்டங்களுக்கு அவா் ஏற்பாடு செய்துள்ளாா்.

 

Tags :

Share via