செவிலியரை கடத்த முயன்ற போலீஸ் பிடிபட்டார்.

by Editor / 03-03-2023 11:37:48pm
 செவிலியரை கடத்த முயன்ற போலீஸ் பிடிபட்டார்.

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஒரு தலை காதலால் செவிலியரை கடத்த முயன்ற போலீசை பிடித்து போலீசார் விசாரணை.  தென்காசி மாவட்டம் கடையம் அருகே கல்யாணிபுரத்தை  சேர்ந்த செவிலியர் சிந்துஜா வயது 26 . என்பவரை அதே பகுதி சேர்ந்த மணிமுத்தாறு 9வது பட்டாலியனில்  போலீசாக வேலை பார்த்து வரும் மாரியப்பன் என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்த நிலையில் அவரை இன்று காரில் கடத்த முயன்ற போது கடையம் போலீசார் மாரியப்பனை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 3  பேரை  போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via