11-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சகமாணவன் பருமனாக இருப்பதால் கேலி செய்ததால் ஆத்திரத்தில் கொலை

by Staff / 16-05-2022 12:29:50pm
11-ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சகமாணவன் பருமனாக இருப்பதால் கேலி செய்ததால் ஆத்திரத்தில் கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 11ஆம் வகுப்பு பள்ளி மாணவன் கத்தியால் குத்திக்கொலை செய்த சகமாணவன் பிடிபட்டான் சாந்தா பேட்டை புறவழி சாலையில் நேற்று முன்தினம் காலை 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் கை மற்றும் கழுத்துப் பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக திருக்கோவிலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தவரின் ஊரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கோகுல் என்பது தெரியவந்துள்ளது.மேலும் அவனை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து சென்று சக நண்பனை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது மாணவனை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அந்த மாணவன் தான் பருமனாக இருப்பதால் அடிக்கடி கேலி செய்வதே தாங்க முடியாத ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்தார்.

 

Tags :

Share via