அசாமில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு
அசாமில் பெய்த கன மழையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது 2 குழந்தைகள் உட்பட 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். அசாமில் உள்ள 29 மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் சுமார் 7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 80 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் 2.251 கிராமங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன நூற்றுக்கணக்கான முகாம்களில் பல்லாயிரம் பேர் அடைக்கலம் புகுந்துள்ளனர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Tags :