தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை...

by Staff / 28-05-2022 02:58:40pm
தீ விபத்து குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை...

 சேலம் மகுடஞ்சாவடி சேர்ந்த சத்யராஜ் நியாஸ் இருவரும் ஆம்னி காரில் ஏற்காடு சுற்றுலா செல்ல சென்று கொண்டிருந்தனர்  ஏற்காடு பிரதான சாலையில் மாவட்ட ஆட்சியர் குடியிருப்பு அருகே செல்லும் போது காரில் இருந்து புகை வந்த நிலையில்   இருவரும் உடனடியாக காரில் இருந்து  இறங்கி உள்ளனர் ஆனால்   தீப்பிடித்து எரிந்தது கார்  மளமளவென கார்  முழுவதும் தீ பரவிய பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த செவ்வாய் பேட்டை  தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்து வருகின்றனர். இதனால் ஏற்காடு பிரதான சாலையில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது சம்பவ இடத்திற்கு சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்தினி நேரில் சென்று விபத்து குறித்து கேட்டறிந்தார்.இந்நிலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது குறித்து  அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.திடீரென சாலையில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

 

Tags :

Share via