புகையிலை பொருட்கள் கடத்திய விற்ற 2 பேர் கைது

by Admin / 08-08-2021 09:51:54pm
புகையிலை பொருட்கள் கடத்திய விற்ற 2 பேர் கைது



   
புகையிலை பொருட்கள் கடத்திய விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் டவுன் போலீசார், ஓசூர் பஸ் நிலையத்தில் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த சென்னை மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த சேத்தன் (வயது 40) என்பவரை கைது செய்தனர்

. அவரிடம் இருந்து 7 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு புகையிலை பொருட்களை கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது

. இதே போல், தேன்கனிக்கோட்டை போலீசார் ஒசஅள்ளி கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற அதே ஊரை சேர்ந்த மணி (50) என்பவரை போலீசார் கைதுசெய்தனர்.

 

Tags :

Share via