பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலனுக்காக நீதியே பிரதமர் மோடி விடுவித்தார்

by Staff / 30-05-2022 02:58:18pm
 பெற்றோரை இழந்த பிள்ளைகளின் நலனுக்காக நீதியே பிரதமர் மோடி விடுவித்தார்


கொரோனாவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் பள்ளிக்கல்வி உயர்கல்வி வாழ்க்கைச் செலவுக்கு உதவும் வகையில் பிஎம் கேர்ஸ் நிதியிலிருந்து பணப் பயன்களை பிரதமர் மோடி விடுவித்தார். அதன்பின் பணியாளர்களுக்கு காணொளியில் பேசிய பிரதமர் மோடி கோரணா தோற்றால் குடும்பத்தினரை இழந்தோரின்  துன்பம் எத்தகையது என தானறிந்து உள்ளதாக குறிப்பிட்டார். கொரோனவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் உயர்கல்வி கல்விக் கடன் வழங்கப்படும் பிஎம் கேர்ஸ் உதவும் என்றும் அவர்களின் அன்றாட தேவைக்கு மாதந்தோறும் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். குழந்தைகளிடம் ஒரு பிரதமராக பேசாவில்லை என்றும் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக பேசுவதாகவும் தெரிவித்தார். பிள்ளைகள் பள்ளிக் கல்வியை முடித்து உயர் கல்வியை தொடர நிறைய பணம் தேவைப்படும் என்றும் அதனால் 18 வயது முதல் 23 வயது வரை அவர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு 23 வயது நிறைவடையும் போது 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். மருத்துவ அட்டை வழங்கப்பட்டு உள்ள குழந்தைகளுக்கு 5 லட்ச ரூபாய் வரை இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார் எத்தகைய உதவி செய்யும் முயற்சியும் பெற்றோரின் அன்புக்கு ஈடாகாது என குறிப்பிட்ட பிரதமர். பெற்றோர் இல்லாத பிள்ளைகளுக்கு பாரதத்தாய் துணை இருப்பதாக தெரிவித்தார். இது ஒரு தனிமனிதரின் அமைப்பின் அரசின் முயற்சி இல்லை என்றும் மக்கள் கடினமாக உழைத்து ஈட்டிய பணத்தில் வழங்கியதாகவும் என்றும் தெரிவித்தார்.கொரோனா சூழலில்  மருத்துவமனைகளில் வசதி செய்யவும் வெண்டி லெட்டர்கள் வாங்கவும் ஆக்சிசன் ஆலைகளை நிறுவவும் பிஎம் கேர்ஸ்  நிதி உதவியதாகவும் இதனால்  எண்ணற்ற உயிர்கள் காக்க பட்டதாகவும் தெரிவித்தார்கொரோனா  சூழலில் அகால மரணமடைந்தவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பிஎம் கேர்ஸ்  நிதி பயன்படுவதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via