ஆறு குழந்தைகளை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரம்

by Editor / 31-05-2022 08:36:48am
ஆறு குழந்தைகளை தாயே கிணற்றில் வீசி கொலை செய்த கொடூரம்

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம், காரவலி கிராமத்தில் உள்ள 30 வயதான பெண் ஒருவர் அங்குள்ள கிணற்றுக்குள் தனது 6 குழந்தைகளை அடுத்தடுத்து வீசி எறிந்துள்ளார். அலறியபடி தண்ணீருக்குள் விழுந்த அவர்கள் மூழ்கிய நிலையில், இதுகுறித்து தகவல் அறிந்த அந்தபகுதியைசேர்ந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

உடனடியாக விரைந்து சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் கிடந்த குழந்தைகளை மீட்டனர்.ஆனால் அவர்கள் அனைவரும் உயிரிழந்தனர். நீரில் மூழ்கியவர்களில் 18 மாதமே ஆன பச்சிளம் குழந்தை உள்பட 10 வயதுக்கு உட்பட்ட 5 பெண் குழந்தைகளும் அடங்கும். அந்த பெண்ணை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குடும்ப தகராறின்போது அந்த பெண்ணை அவரது கணவர் வீட்டை சேர்ந்தவர்கள் தாக்கியதாகவும், இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தான்தான் இவர்களிடம் தினமும் கஷ்டப்படுவதாகவும் தான் பெற்ற குழந்தைகளுக்கு அந்த நிலைமை வந்துவிடக்கூடாது என்பதால் பெற்ற குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக்க போலீசார் நடத்திய விசாரணையில் அந்தபெண் கூறியதாக தெரிய வந்துள்ளது.

 

Tags : Mother of six killed in Karavali village in Raigad district, Maharashtra

Share via