சிறுமியிடம் ஆபாசம் அத்துமீறல் வடமாநில நபர் கைது
பெங்களூரிலிருந்து தானாப்பூர் செல்லும் ரயிலில் பீகாரை சேர்ந்த 7 வயது சிறுமி பயணம் செய்துள்ளார். ரயிலானது நேற்று மாலை 3 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடை 5ல் வந்த போது, சிறுமி கழிப்பறைக்கு சென்றார்.அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் சிறுமியிடம் ஆபாசமாக நடந்துக்கொண்டு அத்துமீற முயற்சி செய்துள்ளார். மேலும் நடந்ததை பற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.உடனே இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தகவல் அளித்தார் அவரது தந்தை ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற நபரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பதும், இவர் கட்டுமான பணி செய்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து சென்ட்ரல் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வைத்து தீபக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :