சிதம்பரம் கோயிலில் ஆய்வுநடத்த தீட்சித்தர்கள் அனுமதி தராத நிலையில் புகார் தெரிவிக்கலாம்: அறநிலையத்துறை அறிவிப்பு
சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ளோர் ஜூன் 20,21ல் விசாரணை குழுவிடம் புகார் அளிக்கலாம் என்று அறநிலையத்துறை அறிவித்துள்ளது. சிதம்பரம் கோயிலில் ஆய்வுநடத்த தீட்சித்தர்கள் அனுமதி தராத நிலையில் புகார்களை கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் மக்கள் புகாரளிக்கலாம் என்று அறநிலையத்துறை கூறியுள்ளது. vocud.hrce@tn.gov.in என்ற முகவரியிலும் ஜூன் 21 மாலை 3 மணிக்குள் கருத்து ஆலோசனை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது
Tags :