காய்கறி கடை காரர் கம்பால் அடித்து கொலை

by Staff / 14-06-2022 01:29:36pm
காய்கறி கடை காரர் கம்பால் அடித்து கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள தளபதி சமுத்திரம் மேலூரை சேர்ந்தவர் ஜவர்கலால் நேரு (55).இவர் அப்பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்த ஜவர்கலால் நேரு வீட்டின் முன் இருக்கும் திண்ணையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.இந்நிலையில், தூங்கி கொண்டிருந்த ஜவர்கலால் நேரு- வை மர்ம நபர்கள் உருட்டுக்கட்டையால் தாக்கி அவரை படுகொலை செய்துள்ளனர். இன்று காலையில் அவர் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுபற்றி ஏர்வாடி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
மேலும் ஜவர்கலால் நேரு கட்டையால் அடித்து கொலை செய்தது யார்?..  கொலைக்கான காரணம் என்ன?என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தென் மாவட்டங்களில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

Tags :

Share via