சிக்கன் சாப்பிட்டு உயிரிழப்பு
சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் ரஞ்சித்( 22) .பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படித்து குறும்படம் எடுத்தும் நடித்தும்கேமராமேனாக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பெரம்பூரில் உள்ள தனது நண்பர். கிரிதரன் மருந்தகத்திற்கு சென்று
நண்பர்களுடன் சேர்ந்து சிக்கன் ஆர்டர் செய்துசாப்பிட்டுள்ளனர். பின்பு அனைவரும் வீட்டிற்கு செல்ல . ரஞ்சித்தும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவர் இடது பக்கம் முழுவதும் வலிக்கின்றத என்று. கூறியுள்ளார்.
வாந்தியும் எடுத்துள்ளார். பதறிப்போன அவரது அண்ணன் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றார் . மருத்துவமனையில் ரஞ்சித்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ரஞ்சித் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என்று. குடும்பத்தினர் வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஞ்சித்துடன் மொத்தம் 3 பேர் சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு எந்தபாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. ரஞ்சித்தின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Tags :