60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக சிலைகள் அமெரிக்க அருங்காட்சியத்தில் இருப்பது கண்டுபிடிப்பு

by Staff / 16-06-2022 11:31:47am
60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட தமிழக சிலைகள் அமெரிக்க அருங்காட்சியத்தில் இருப்பது கண்டுபிடிப்பு


 கும்பகோணம் அருகே 60 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட இரு சிலைகள் அமெரிக்க அருங்காட்சியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகுருநாதன் சுவாமி கோவிலில் இருந்த சோமஸ்கந்தர் மற்றும் தனி அம்மன் சிலைகள் திருடப்பட்டு போலியான சிலைகள் மாற்றி வைக்கப்பட்டது தெரியவந்தது. திருடப்பட்ட  சோமஸ்கந்தர்சிலை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள நார்டன் சைமன் மியூஸியத்தில்  அம்மன் சிலை அமெரிக்காவின் டென்வர் மியூசியத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரு சிலைகள் மீட்பு பணியில் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

 

Tags :

Share via