குற்றாலம் வனப்பகுதிகளில் பெய்த மழையால்அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பு

by Editor / 01-07-2022 08:09:00am
குற்றாலம் வனப்பகுதிகளில் பெய்த மழையால்அனைத்து அருவிகளிலும்  நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மெயின் அருவி புலியருவி சிற்றருவி பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து உள்ளது.நேற்று  ஐந்தருவியில் மட்டும் தீடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.கற்கள் அடித்துவரப்பட்டதால்  சுற்றுலா பயணிகள் நலன் கருதி அருவியில் குளிப்பதற்கு நேற்று மாலையில் காவல்துறைசார்பில் தடை விதிக்கப்பட்டது.குற்றாலம் மெயினருவியில் பாதுகாப்பு வளையத்தை ஒட்டி தண்ணீர் கொட்டுவதால் அங்கு குளிக்க சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர்.காலையில் நீர்வரத்து குறைந்ததால் காலை முதலே அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

Tags : Increase in water level in all waterfalls due to heavy rains in Courtallam forests

Share via