60 பேர் சுட்டுக்கொலை
மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோவில் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மாலியின் எல்லைப்பகுதியான யாடேங்கா மகாணத்தின் கர்மா கிராமத்திற்குள் புர்கினாபே இராணுவ சீருடையில் சிலர் நுழைந்துள்ளனர். பின்னர் அவர்கள் திடீரென மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் சுமார் 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் அல்கொய்தா, ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய அமைப்புகளின் ஆதிக்கம் தொடர்கிறது. பல ஆண்டுகளாக இங்கு தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதே பகுதியில் கடந்த 15ஆம் நடத்தப்பட்ட இதேபோன்ற தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர்.
Tags :