முதலமைச்சரின் உத்தரவின்பேரில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்-சிறுமிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நிதி உதவி
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் விபத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று நிதி உதவி வழங்கினார். நாகமலை புதுக்கோட்டை சேர்ந்த முத்துமுருகன் அனிதா செல்வி தம்பதியினருக்கு சிவகுருநாதன் என்ற மகனும் ஹரணி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் செல்வி விபத்தில் உயிரிழந்த நிலையில் தந்தை முத்து முருகன் நோயினால் காலமானார். இந்த நிலையில் பெற்றோரை இழந்து தவித்த இந்த குழந்தைகள் பற்றிய செய்தியை பார்த்த முதல் அமைச்சர் ஸ்டாலின் உடனடியாக அவர்களுக்கு நிதி உதவி அளிக்கவும் கல்விக்காக ஏற்பாடு செய்யவும் நிரந்தர வீடு கட்டிக் கொடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
Tags :