மாமுல் தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகன் கடத்தல் 2 பேர் கைது

by Editor / 21-07-2022 03:44:33pm
மாமுல் தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகன் கடத்தல் 2 பேர் கைது


சென்னையை அடுத்த பல்லாவரத்தில் மாமூல் தர மறுத்த மளிகை கடை உரிமையாளர் மகன் கத்தி முனையில் கடத்தி சென்று சித்திரவதை செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புத்தூரில் மளிகை கடை நடத்தி வரும் சசிகுமாரின் மகன் யோகேஸ்வரன் கடத்திச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் பாழடைந்த வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்தது .கஞ்சா போதையில் அவர்கள் அனைவரும் உறங்கிய நேரத்தில் தப்பிய யோகேஸ்வரன் போலீசில் அளித்த புகாரின் பேரில் பல்லாவரம் பாலம் அருகே பதுங்கியிருந்த எடைசன் ஜெயப்பிரகாஷ் போலீசார் கைது செய்தனர் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via