இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

by Editor / 24-07-2022 04:21:13pm
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் தண்ணீர் பந்தல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். சென்னை ஐயப்பன் தங்களைச் சேர்ந்த பார்வதிநாதன் தனது சொந்த ஊரான காரைக்குடியில் நடக்கும் கோவில் திருவிழாவுக்காக குடும்பத்தினருடன் காரில் சென்றார். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனம் மற்றும் சாலையோரமாக நின்றிருந்த லாரி மீது மோதியது இதில் பார்வதிநாதன் அவரது மனைவி மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்ற வரும் இறந்தனர்.

 

Tags :

Share via