செஸ் :சுவிட்சர்லாந்து வீரரைவென்ற தமிழக வீரர் பிரக்ஞானந்தா

by Editor / 31-07-2022 10:58:33pm
செஸ் :சுவிட்சர்லாந்து வீரரைவென்ற தமிழக  வீரர் பிரக்ஞானந்தா

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தா சுவிட்சர்லாந்து வீரர் யானிக்குடன் மோதினர். இந்த போட்டியில் அவர் கருப்பு நிற காய்களுடன் சுவிட்சர்லாந்து வீரரை எதிர்கொண்டார். 67வது காய் நகர்த்தலில் அவர் சுவிட்சர்லாந்து வீரரை வென்று அபார வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றதற்கு பிறகு தமிழக வீரர் பிரக்ஞானந்தாவும், இந்திய ஓபன் பி அணியின் பயிற்சியாளர் ரமேஷ் ஆகியோரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பிரக்ஞானந்தா, நான் எனது ரிசல்ட் குறித்து சந்தோஷ படவில்லை,வெற்றி பெறுவேன் என்று கூட நினைக்கவில்லை,டிரா செய்ய வேண்டும் என தான் நினைத்தேன். நான் தோற்று விடுவேனோ என தான் நினைத்தேன் ஆனால் அடுத்தடுத்து நன்றாக விளையாட அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன் என தெரிவித்தார். என்னை பொறுத்தவரை கருப்பு வெள்ளை என வித்தியாசம் இல்லை என்றும் எதுவாக இருந்தாலும் உறுதியாக விளையாட வேண்டும் என்றும் பிரக்ஞானந்தா தெரிவித்தார்.

 

 

Tags :

Share via