கொதிக்கும் கூழ் அண்டாவில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

by Editor / 02-08-2022 08:59:08pm
 கொதிக்கும் கூழ் அண்டாவில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு முத்து மாரியம்மன் கோயிலில் கடந்த ஆடி வெள்ளிக்கிழமை அன்று பொதுமக்களுக்கு வழங்குவதற்கு பெரிய அண்டாவில் கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தனர். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார்  முருகன், கூழ் காய்ச்சுவதற்கு உதவி செய்து கொண்டிருந்த போது திடீரென வலிப்பு வந்ததால் நிலைதடுமாறி கொதித்துக் கொண்டிருந்த கூழ் அண்டாவில் விழுந்தார். உடனே மக்கள் அவரை காப்பாற்ற முயல்வதும் பின் அவரும் எழுந்து நடந்து வரும்பொழுது இடறி விழும் பதற வைக்கும் CCTV காட்சிகள் வெளியாகியுள்ளது

 கொதிக்கும் கூழ் அண்டாவில் தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
 

Tags :

Share via