தோல் தடிமன் நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு.

by Editor / 06-08-2022 01:25:15pm
தோல் தடிமன் நோயால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரம் கால்நடைகள் உயிரிழப்பு.

 குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பரவி வரும் ஒருவித தோல் நோயால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடை இதுவரை உயிரிழந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக பரவி வரும் இந்த வைரஸ் தோல் நோயால் குஜராத்தில் இதுவரை 11 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. ஜாம் நகரில் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் பணியை மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் நேரில் பார்வையிட்டார். நோய் பரவி வரும் குஜராத் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு 28 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளன.

 

Tags :

Share via