போலீஸ் எனக்கூறி மூதாட்டியின் வீடு புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கைது.

by Editor / 13-08-2022 05:15:54pm
போலீஸ் எனக்கூறி  மூதாட்டியின் வீடு புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கைது.

திருப்பூர்-பெருமாநல்லூர் அருகே போலீஸ் என கூறி மூதாட்டியின் வீடு புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்ற 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கணகாபழையத்தைச் சேர்ந்த அபிராமி என்ற மூதாட்டி தனது மகளுடன் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை மதியம் இருவரும் வீட்டில் இருந்த போது வீட்டுக்குள் நுழைந்த 5 பேர் கொண்ட கும்பல் தங்கள் மாப்ட்டில் வந்துள்ள போலீஸ் என்றும் சந்தேகம் இருப்பதால் வீட்டில் சோதனையிட வேண்டும் என்றும் கூறி உள்ளே புகுந்து பீரோவில் இருந்த பத்தாயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மூதாட்டி அளித்த புகாரின் பேரில் சிசிடி காற்றின் உதவியுடன் 5 பேரையும் கைது செய்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via